Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

விம்பிள்டன் டென்னிஸ்: அரையிறுதியில் ரைபகினா

ADDED : ஜூலை 10, 2024 10:15 PM


Google News
Latest Tamil News
லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் அரையிறுதிக்கு ரைபகினா, கிரெஜ்சிகோவா முன்னேறினர்.

இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-4' வீராங்கனை கஜகஸ்தானின் ரைபகினா, 21 வது இடத்திலுள்ள உக்ரைனின் ஸ்விட்டோலினா மோதினர்.

முதல் செட்டை ரைபகினா 6-3 என கைப்பற்றினார். தொடர்ந்து அடுத்த செட்டையும் 6-2 என வசப்படுத்தினார். முடிவில் ரைபகினா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறினார். முன்னதாக 2022 விம்பிள்டனில் கோப்பை வென்றிருந்தார்.

நேற்று நடந்த மற்றொரு காலிறுதியில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ ('நம்பர்-13'), செக் குடியரசின் பார்பொரா கிரெஜ்சிகோவா ('நம்பர்-31') மோதினர். முதல் செட்டை 6-4 என கைப்பற்றிய கிரெஜ்சிகோவா, அடுத்த செட்டை 'டை பிரேக்கர்' வரை சென்று 7-6 என வென்றார். முடிவில் கிரெஜ்சிகோவா 6-4, 7-6 என வெற்றி பெற்று, விம்பிள்டன் அரங்கில் முதன் முறையாக பைனலுக்குள் நுழைந்தார்.

மற்றொரு காலிறுதியில் இத்தாலியின் பாவோலினி, அமெரிக்காவின் நவார்ரோ மோதினர். இதில் பாவோலினி, 6-2, 6-1 என எளிதாக வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஆடாம ஜெயிச்ச ஜோகோவிச்

ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் செர்பியாவின் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் டி மினார் மோத இருந்தனர். இடுப்பு காயம் காரணமாக மினார் விலகிக் கொள்ள, ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us