Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், 'டி-20' அட்டவணை அறிவிப்பு

இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், 'டி-20' அட்டவணை அறிவிப்பு

இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், 'டி-20' அட்டவணை அறிவிப்பு

இலங்கை செல்கிறது இந்தியா: ஒருநாள், 'டி-20' அட்டவணை அறிவிப்பு

ADDED : ஜூலை 11, 2024 10:13 PM


Google News
Latest Tamil News
கொழும்பு: இந்தியா, இலங்கை அணிகள் மோதும் ஒருநாள், 'டி-20' தொடருக்கான அட்டவணை வெளியானது.

இலங்கை செல்லும் இந்திய அணி, மூன்று 'டி-20', மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதற்கான அட்டவணையை இலங்கை கிரிக்கெட் போர்டு வெளியிட்டது. இதன்படி மூன்று 'டி-20' போட்டிகள் வரும் ஜூலை 26, 27, 29ல் பல்லேகெலே சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் (இரவு 7:00 மணி) நடக்கவுள்ளன. அதன்பின் மூன்று ஒருநாள் போட்டிகள் ஆக., 1, 4, 7 ல் கொழும்புவின் பிரேமதாசா மைதானத்தில் (மதியம் 2:30 மணி) நடக்கவுள்ளன.

பாண்ட்யா கேப்டன் : சமீபத்திய 'டி-20' உலக கோப்பை தொடருக்கு பின், இந்திய அணி பங்கேற்கும் முதல் தொடர் இது. சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராத் கோலி, ரவிந்திர ஜடேஜா ஓய்வு பெற்றதால் ஹர்திக் பாண்ட்யா 'டி-20' அணிக்கு கேப்டனாக நியமிக்கப்படலாம். புதிய பயிற்சியாளர் கவுதம் காம்பிருக்கு இத்தொடர் முதல் சவாலாக அமையும்.

ஒருநாள் அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்படலாம். தொடர்ச்சியான அட்டவணை காரணமாக ஒருநாள் போட்டியில் சில சீனியர் வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாம்.

ஹசரங்கா விலகல்

இலங்கை 'டி-20' அணியின் கேப்டன் பதவியில் இருந்து ஹசரங்கா விலகினார். சமீபத்திய 'டி-20' உலக கோப்பையில் இவரது தலைமையில் பங்கேற்ற இலங்கை அணி லீக் சுற்றோடு வெளியேறியது. இதனால் இந்தியாவுக்கு எதிரான தொடரில், இலங்கை அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படலாம்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us