/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம் உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
உழவர்கரை நகராட்சியில் இன்று வரி வசூல் முகாம்
ADDED : மார் 22, 2025 09:26 PM
புதுச்சேரி : உழவர்கரை நகராட்சி மூலம் வரி வசூல் சிறப்பு முகாம் இரண்டு இடங்களில் இன்று நடக்கிறது.
இதுகுறித்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உழவர்கரை நகராட்சியானது வீடு, சொத்து மற்றும் சேவை வரி செலுத்துவோரின் நலன் கருதி, இன்று (23ம் தேதி) ஆலங்குப்பம், அரசு ஆரம்பப் பள்ளியில் வரி வசூல் சிறப்பு முகாம் காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி ஆலங்குப்பம், சஞ்சீவி நகர் மற்றும் இதர வார்டுகளில் உள்ள வீடு, சேவை மற்றும் குடிநீர் கட்டண வரி நிலுவை தாரர்கள் 2024-25ம் ஆண்டு வரையிலான காலத்திற்கு செலுத்தலாம்.
இதேபோல், தட்டாஞ்சாவடி வி.வி.பி., நகர் வீட்டு வரி வசூல் மையத்திலும் இன்று (23ம் தேதி) காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை வரி வசூல் சிறப்பு முகாம் நடக்கிறது. இதில், உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் உள்ளவர்கள் தங்களது வரி நிலுவை தொகையை செலுத்தி வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வீடு, சொத்து மற்றும் சேவை வரி செலுத்துவோர் ஆன்லைன் மூலம் lgrams.py.gov.in என்ற முகவரியிலும் மற்றும் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் செலுத்தலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.