/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடி: 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 22, 2025 09:26 PM
புதுச்சேரி : முத்தியால்பேட்டையில் தொழிலதிபரிடம் ரூ. 40 லட்சம் மோசடியில் ஈடுபட்ட இரும்பு ஏற்றுமதி கம்பெனி உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, முத்தியால்பேட்டை, வசந்த நகரை சேர்ந்தவர் இளங்கோவன், 53; தொழிலதிபர். இவர், வெளிநாட்டில் உள்ள பல எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கி வருகிறார்.
இவரது நண்பர் சங்கர் மூலம் சென்னையை சேர்ந்த தனியார் இரும்பு ஏற்றுமதி கம்பெனியை சேர்ந்த உரிமையாளர்கள் தமிழ்ச்செல்வன், அவரது மகன் சுந்தர முத்து செல்வம் ஆகியோர் கடந்த 2018ம் ஆண்டு, இளங்கோவனை சந்தித்து அறிமுகமாகி உள்ளனர்.
அப்போது, தனது கம்பெனி இரும்பு பொருட்களை சீனா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய கடனாக பணம் வழங்கும்படி, இளங்கோவனிடம் கேட்டுள்ளார். இதையடுத்து, இளங்கோவன் முதல் தவணையாக 15 லட்சம், இரண்டாம் தவணையாக 25 லட்சம் என, மொத்தம் 40 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வங்கி மூலம் அனுப்பியுள்ளார்.
ஆனால், பணத்தை பெற்ற தமிழ்செல்வன், சுந்தரமுத்து செல்வம் ஆகியோர் இளங்கோவனிடம் பெற்ற பணத்தை திரும்ப கொடுக்காமல் ஏமாற்றி வந்ததுடன், பணத்தை திரும்ப கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, இளங்கோவன் அளித்த புகாரின் பேரில், தமிழ்செல்வன், சுந்தரமுத்துசெல்வம் ஆகியோர் மீது முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.