ADDED : மார் 22, 2025 09:27 PM

புதுச்சேரி : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பாலுாட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கத்தில் நடந்தது.
நிகழ்ச்சயில், துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு தொகுதியைச் சேர்ந்த 48 பயனாளிகளுக்கு, ரூ. 18 ஆயிரம் வீதம், ரூ. 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கான உதவித் தொகையினை வழங்கினார்.
நிகழ்ச்சியில், நலத்துறை ஆய்வாளர் ஏழுமலை உள்ளிட்ட ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.