ADDED : செப் 10, 2025 08:53 AM

திருக்கனுார்; மண்ணாடிப்பட்டு தொகுதி என்.ஆர்.கே. குரூப்ஸ் சையது ஏற்பாட்டில் திருக்கனுார் பேட் மாரியம்மன் கோவிலில் அமைச்சர் பிறந்தநாள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில், அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, கேக் வெட்டி, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
பின், கோவிலுக்கு புதிதாக சகட வாகனம் செய்வதற்கு தனது சொந்த செலவில் ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் நிதியுதவி வழங்கினார்.இதில், ராஜாமணி, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.