Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு கணவர் தீக்குளித்து தற்கொலை

குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு கணவர் தீக்குளித்து தற்கொலை

குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு கணவர் தீக்குளித்து தற்கொலை

குடிப்பதற்கு மனைவி பணம் தர மறுப்பு கணவர் தீக்குளித்து தற்கொலை

ADDED : ஜூலை 09, 2024 04:56 AM


Google News
காரைக்கால், : காரைக்காலில் குடிப்பதற்கு மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் கணவன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.

காரைக்கால் நிரவி ஓடுதுறை மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்த ராஜரத்தினம், 55; கட்டட கூலி தொழிலாளி. இவரது மனைவி நிர்மலா. இவர்களின் இரு பிள்ளைகளுக்கும் திருமணம் முடிந்துள்ளது.

ராஜரத்தினத்திற்கு குடிப்பழக்கம் உள்ளதால் வீட்டில் அருகில் உள்ள உறவினர்களிடம் பணம் பெற்றுள்ளார்.

நேற்று முன்தினம் குடிப்பதற்கு பணம் வேண்டும் என மனைவியிடம் கேட்டு தகராறு செய்துள்ளார். அவர் தர மறுக்கவே மனமுடைந்த ராஜரத்தினம் வீட்டில் இருந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக்கொண்டார்.இவரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை காப்பாற்றி அரசு மருந்துவமனையில் சேரத்தனர்.

பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலைராஜரத்தினர் இறந்தார்.

நிரவி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us