Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

வலிப்பு ஏற்பட்டு தொழிலாளி சாவு

ADDED : ஜூலை 14, 2024 10:57 PM


Google News
காரைக்கால்: காரைக்கால், திருப்பட்டினம், போலகம் மாரியம் மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில், 52. கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.

செந்தில் வேலைக்கு செல்லாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந் தார். அவருக்கு வலிப்பு நோய் இருந்தது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் வெளியே சென்ற செந்தில் போலகம் கடை தெருவில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி கிடந்தார். அவரை அரசு மருத் துவமனைக்கு கொண்டு சென்றபோது, டாக்டர் பரி சோதித்து இறந்து விட்டதாக தெரிவித்தார்.

திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us