ADDED : ஜூலை 04, 2024 10:10 PM
புதுச்சேரி : திருக்கனுார் அருகே அடையாளம் தெரியாத இறந்து கிடந்த முதியவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த சோரப்பட்டு தனியார் கம்பெனி அருகே அடையாளம் தெரியாத 55வயது மதிக்கத் தக்க முதியவர் ஒருவர் கடந்த 3ம் தேதி இறந்து கிடந்தார். அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என, தெரியவில்லை. இதுகுறித்து, திருக்கனுார் போலீசார் வழக்கு பதிந்து, இறந்தவர் யார் என, விசாரணை நடத்தி வருகின்றனர்.