ADDED : ஜூன் 19, 2024 11:26 PM
நெட்டப்பாக்கம் : பொது இடத்தில் ஆபாசமாக பேசியவரை போலீசார் கைது செய்தனர்.
ஏரிப்பாக்கம் புதுக்காலனி மூன்றாவது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன் 48, இவர் நேற்று முன்தினம் மது குடித்துவிட்டு, கரியமாணிக்கம் நான்கு முனை சந்திப்பு பகுதியில் நின்று கொண்டு அவ்வழியாக சென்ற பொதுமக்கள், பஸ்சிற்காக காத்திருந்த பெண்களை பார்த்து ஆபாசமாக பேசினார். தகவலறிந்த நெட்டப்பாக்கம் போலீசார் பாஸ்கரன் ஜெயச்சந்திரன் மீது வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனர்