Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

தாய் மாயம்: மகன் புகார்

ADDED : ஜூன் 11, 2024 11:23 PM


Google News
அரியாங்குப்பம், : தவளக்குப்பம் அருகே தாயை காணவில்லை என, மகன் போலீசில் புகார் செய்துள்ளார்.

கடலுார் மாவட்டம் தியாகவல்லி, சித்திரை பேட்டை பகுதியை சேர்ந்தவர் குருநாதன் இவரது மனைவி ரெஜினா, 39; இவருக்கு நன்கு அறிமுகமான, வீராம்பட்டினத்தை சேர்ந்த அமர்நாத் என்பவர், கடந்த சில மாதங்களுக்கு முன், ரெஜினாவின் நகைகளை வாங்கி தவளக்குப்பம் தனியார் வங்கியில் அடகு வைத்தார். அதை மீட்டு தருவதாகவும், அதனால், தவளக்குப்பம் தனியார் வங்கிற்கு ரெஜினாவை வருமாறு கூறியிருந்தார்.

இந்நிலையில், தவளக்குப்பம் தனியார் வங்கி வாசலில் நேற்று காலை ரெஜினா வந்து அமர்நாத் வருகைக்காக காத்திருந்தார். அதையடுத்து, அவரை காணவில்லை. இதுகுறித்து, அவரது மகன் கனிஷ்கர் அளித்த புகாரின் பேரில், தவளக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us