ADDED : ஜூன் 24, 2024 04:55 AM
காரைக்கால் : காரைக்காலில் வயிற்று வலியால் அவதிப்பட்டவர் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால் நெடுங்காடு அகரமாங்குடி வடக்கு தெருவை சேர்ந் தவர் கலையரசன், 46; கூலி தொழிலாளி.
இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு மருந்துவர்களிடம் சிகிச்சை பெற்றுள்ளார்.
இந்நிலையில் கடந்த 15ம் தேதி கலையரசனுக்கு மீண்டும் அதிக வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அவர் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கினார்.
உடன் அவரை காரைக்கால் அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். பின் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருந்துவனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் அவர் இறந்தார்.
நெடுங்காடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.