Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

கஞ்சா விற்ற பட்டதாரிகள் கைது

ADDED : ஜூலை 07, 2024 03:54 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டையில் கஞ்சா விற்ற பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

மேட்டுப்பாளையம் தொழிற்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற மேட்டுப்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார், சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரித்தனர். அவர்கள் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரனையில் அவர்கள் விழுப்புரத்தை சேர்ந்த ஐ.டி.ஐ., ஊழியர் ரூபன்ராஜ் 23, எம்.பி.ஏ., பட்டதாரி ராகேஷ், 26; என்பது தெரிய வந்தது.

இருவரையும் கைது செய்து, 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us