/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
இஸ்ரேல் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 07, 2024 03:53 AM

புதுச்சேரி: பாலஸ்தீன அப்பாவி மக்களை கொல்லும் இஸ்ரேல் அரசின் இனப் படுகொலையை கண்டித்து, காமராஜர் சிலை அருகில், அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டுக்கழகம், புதுச்சேரி மாநிலக்குழு சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது.
அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் புதுச்சேரி மாநிலக்குழு தலைவர் நாரா கலைநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக, முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் கலந்து கொண்டார். பொதுச்செயலாளர் ஜீவானந்தம் உரையாற்றினார். இண்டியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், வக்கீல்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதில், சர்வதேச மனிதநேய குரலுக்கு செவி சாய்க்க வேண்டும் மற்றும் இந்திய அரசு இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. வக்கீல் பிரதீஷ் இருதயராஜ் நன்றி கூறினார்.