ADDED : ஜூலை 07, 2024 03:54 AM
புதுச்சேரி: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருபுவனை சகடப்பட்டு பிள்ளையார்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிஹரன், 18. இவர் சென்ற ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்து, இந்தாண்டு சிறப்பு தேர்வு எழுதிவிட்டு, வீட்டில் இருந்து வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.