/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கட்டடத்தில் இருந்து விழுந்த மீனவர் சாவு கட்டடத்தில் இருந்து விழுந்த மீனவர் சாவு
கட்டடத்தில் இருந்து விழுந்த மீனவர் சாவு
கட்டடத்தில் இருந்து விழுந்த மீனவர் சாவு
கட்டடத்தில் இருந்து விழுந்த மீனவர் சாவு
ADDED : ஜூன் 02, 2024 04:49 AM
காரைக்கால்: காரைக்காலில் குடிபோதையில் கட்டடத்திலிருந்து தவறி விழுந்து காயமடைந்த மீனவர் சிகிச்சை பலனின்றி உயிழந்தார்.
காரைக்கால் மேடு, சுனாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன், 38; மீனவர். இவர் அதிகமாக மது அருந்துவது வழக்கம். இதனால் உடல்நிலை பாதிக்கப்பட்டது. கடந்த 29ம் தேதி அதிகமாக குடித்த ராமச்சந்திரன் பஞ்சாயத்து கட்டடத்தில் ஏறினார்.
பின்னர் கீழே இறங்கியபோது, போதையில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். திருவாரூர் மருந்துவக் கல்லுாரியில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிழந்தார். இதுக்குறித்து நகர போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.