Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தி.மு.க., -பா.ஜ., சவாலால் பரபரப்பு

தி.மு.க., -பா.ஜ., சவாலால் பரபரப்பு

தி.மு.க., -பா.ஜ., சவாலால் பரபரப்பு

தி.மு.க., -பா.ஜ., சவாலால் பரபரப்பு

ADDED : மார் 12, 2025 06:40 AM


Google News
சட்டசபையில், செந்தில்குமார் எம்.எல்.ஏ., பேசுகையில், 'பெஸ்ட்' (பிசினஸ், எஜிகேசன், ஸ்பிரிச்சுவால், டூரிசம்), புதுச்சேரியாக மாற்றும்வோம் என பிரதமர் கூறினார். ஆனால், எதிலும் வளர்ச்சியில்லை என்றார்.

அசோக்பாபு, பா.ஜ.,: பாகூர் வளர்ச்சி அடையவில்லையா என்றார்.

சிவா: மக்களை சந்தித்து ஓட்டு கேட்பவர்களுக்குதான் கஷ்டம் தெரியும். மக்களை சந்திக்காமல் பதவிக்கு வருபவர்களுக்கு தெரியாது. பா.ஜ., தனித்து போட்டியிட்டு வெற்றி பெறுங்கள் பார்ப்போம்.

ராமலிங்கம், பா.ஜ., : 16 மாநிலங்களில் ஆட்சி செய்கின்றோம், வளர்ச்சி ஏற்படுத்தாமலா? உள்ளோம். ஒரே ஒரு மாநிலத்தில தான் நீங்கள் (தி.மு.க.,) ஆட்சி செய்கின்றீர்கள்.

நாஜிம்: 16 மாநிலங்களிலும் நீங்கள் எப்படி ஆட்சிக்கு வந்தீர்கள் என்று தெரியும்.

அமைச்சர் சாய்சரவணன்குமார், அசோக் பாபு, ஆகியோர், தமிழகத்தில் நீங்கள் தனித்து போட்டியிடுங்கள் பார்ப்போம் என்றதால் வாக்குவாதம் சூடுபிடித்தது.

குறுக்கிட்ட சபாநாயகர் செல்வம், அனுமதித்தவர் மட்டும் பேசட்டும். மற்றவர்கள் அமரக்கூறியதால், மோதல் முடிவுக்கு வந்தது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us