Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., கடும் மோதல்

விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., கடும் மோதல்

விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., கடும் மோதல்

விக்கிரவாண்டி தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.,- நா.த.க., கடும் மோதல்

ADDED : ஜூலை 07, 2024 03:36 AM


Google News
Latest Tamil News
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே தேர்தல் பிரசாரத்தில், தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சியினர் மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. அதையொட்டி, நாளையுடன் பிரசாரம் முடிவதால் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. நேற்று முன்தினம் மாலை விக்கிரவாண்டி அடுத்த தொரவியில் தி.மு.க.,வினர், அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் பிரசாரத்தில் ஈடுபட திரவுபதி அம்மன் கோவில் அருகே திரண்டிருந்தனர்.

அங்கு, நாம் தமிழர் கட்சியினர் நின்று பிரசாரம் மேற்கொண்டனர்.

அப்போது, ஆளும் தி.மு.க.,வை பற்றி, நா.த.க., நிர்வாகிகள் தாக்கி பேசினர். இதனால் ஆத்திரமடைந்த தி.மு.க.,வினர் தட்டிகேட்டதால் இரு கட்சியினருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்து போக செய்தனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us