Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

மது குடித்தவர் மயங்கி விழுந்து பலி

ADDED : ஜூன் 18, 2024 04:42 AM


Google News
அரியாங்குப்பம்: சாராயக்கடையில் அதிகமாக மது குடித்தவர் மயங்கி விழுந்து இறந்தார்.

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல், 45: இவர் தனது மனைவியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வசித்து வருகிறார். அதிகமாக மது குடித்து வந்த இவருக்கு சிறுநீரகத்தில் பிரச்ணை ஏற்பட்டு உடநிலை பாதிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று நோணாங்குப்பம் சாராயக்கடைக்கு சென்று அதிகளவில் மது குடித்தார். அங்கு மயங்கி கீழே விழுந்து இறந்தார்.

அரியாங்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us