அரசியல்வாதி + ஆட்சியாளர் + மக்கள் + காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!
அரசியல்வாதி + ஆட்சியாளர் + மக்கள் + காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!
அரசியல்வாதி + ஆட்சியாளர் + மக்கள் + காவல்துறை = சட்டம் - ஒழுங்கு!

சட்டம் என்றால் என்ன?
உடல், பொருள் ஆவி என்ற அனைத்தையும் அர்ப்பணித்து, நம் முன்னோர் பெற்றுத் தந்த இந்த சுதந்திரத்தை, முழுமையாக அனுபவிக்க இயலாத அளவுக்கு, இத்தனை சட்டங்கள், விதிகள், கட்டுப்பாடுகள் எதற்காக? ஒருவர் அனுபவிக்கும் தனிமனித சுதந்திரம், அடுத்தவருடைய சுதந்திரத்தை பாதிக்கக் கூடாது என்பதற்காக!
ஒழுங்கு என்றால் என்ன?
சமுதாயத்தால் சரியானதென்றும், சமுதாய நலனுக்கு உகந்ததென்றும், தனிமனிதன் மற்றும் மாபெரும் கூட்டத்தால் ஒத்துக் கொள்ளப்பட்டு, சரியான முறையில் நடைபெறும் நடவடிக்கைகள்.
![]() |
சவால்கள்
சமூக விரோதிகள் குறித்த தகவல்களைச் சேகரித்தல், உளவுத்துறையின் கடமை என்றாலும், தகவல்களைக் கொடுக்கும் மக்கள் காட்டும் தயக்கம், குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியமளிப்பதில் காட்டும் அக்கறையின்மை ஆகியவை, காவல்துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள்.
நீதிமன்றத்தில் சரண்
இதனால்தான் ஆங்காங்கே, ரவுடிகள் என்று தங்களைத் தாங்களே சிலர் பிரகடனப்படுத்திக் கொண்டு, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடுகின்றனர். வருமானமிக்க தொழிலில் போட்டிகள் எழுவது சகஜம்; அப்படி உருவாகி, ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்த்துக் கொள்கின்றனர்.
சாதனை படைக்கும்
ஒரு தனி நபரோ அல்லது நபர்களோ, அங்கு வாழும் மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தி பிரபல ரவுடி என்ற பெயரில் வலம் வந்து கொண்டிருக்கிறார் என்றால், அந்த காவல் நிலைய பொறுப்பு அதிகாரி, தன் கடமையைச் செய்யத் தவறி விட்டார் என்றுதான் பொருள்; அங்கு பணியில் தொடரும் தகுதி அவருக்கு இல்லை.