கட்டடங்களுக்கு விலக்கு: புதிய அரசாணைக்கு வரவேற்புடன் கிளம்புது எதிர்ப்பு
கட்டடங்களுக்கு விலக்கு: புதிய அரசாணைக்கு வரவேற்புடன் கிளம்புது எதிர்ப்பு
கட்டடங்களுக்கு விலக்கு: புதிய அரசாணைக்கு வரவேற்புடன் கிளம்புது எதிர்ப்பு

வெளியான அரசாணைகள்
கடந்த மார்ச் 11 ல், இரு அரசாணைகள் (எண்: 69 மற்றும் 70) வெளியிடப்பட்டன. ஓர் அரசாணையில், அதிகபட்ச உயரத்தை 12 மீட்டரிலிருந்து 14 மீட்டராக உயர்த்தியும், முன்புறம், பின்புறம் உள்ளிட்ட பக்கத் திறவிடங்களில் மாற்றம் செய்தும் கட்டடம் கட்ட அனுமதிக்கப்பட்டது. அதேபோல, 750 சதுர மீட்டர் (8072 சதுர அடி) பரப்பளவுக்கு உட்பட்ட மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் என்பது 8 வீடுகள் வரையுள்ள ஒரே கட்டடம் வரை கட்டட நிறைவுச் சான்றுக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
எதிர்ப்பும் உண்டு
அதே நேரத்தில், அனுமதியற்ற கட்டடங்களுக்கு எதிராகப் போராடி வரும் அமைப்புகள், இந்த அரசாணைக்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. எட்டு வீடுகள் கொண்ட ஒரே கட்டடம் என்பது, வணிக ரீதியாகக் கட்டப்படும் சிறிய அடுக்குமாடிக் குடியிருப்பாகிவிடும் என்பதால், அதற்கு விலக்கு அளிப்பது, விதிமீறல் கட்டடங்கள் அதிகரிக்க வழிவகுக்குமென்று அச்சம் தெரிவித்துள்ளன.