Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/ப்ரீமியம்/ 'நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி'

'நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி'

'நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி'

'நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவி தருவதாக ஆசைகாட்டிய இண்டியா கூட்டணி'

ADDED : ஜூன் 09, 2024 12:34 AM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: 'லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், நிதீஷ் குமாருக்கு பிரதமர் பதவியைத் தருவதாக, இண்டியா கூட்டணி ஆசை காட்டியது. ஆனால், அதை அவர் நிராகரித்தார்,'' என, ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி தெரிவித்தார்.

பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளது. லோக்சபா தேர்தலில், 12 தொகுதிகளில் அக்கட்சி வென்றது.

தேர்தல் முடிவுகள் வெளியான அன்று, நிதீஷ் குமார் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவின், எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பேசியதாக தகவல்கள் வெளியாயின.

இது குறித்து ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் கே.சி. தியாகி கூறியுள்ளதாவது:

தேர்தல் முடிவுகள் வெளியானபோது, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுப்பதற்காக, நிதீஷ் குமாருடன், இண்டியா கூட்டணி கட்சியினர் பேசினர். அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஆசை காட்டினர்.

இண்டியா கூட்டணி உருவாவதற்கு முக்கிய பங்காற்றிய அவருக்கு, ஒருங்கிணைப்பாளர் பதவியைத் தருவதற்கு தயங்கினர். தற்போது பிரதமர் பதவியையே தருவதாக ஆசை காட்டினர். ஆனால், அதை அவர் நிராகரித்தார்.

பிரதமர் மோடி தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்வதாக அவர் அறிவித்தார். இதையடுத்து, இந்தப் பேச்சுகளுக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us