புதிய முதலீடுகளை ஈர்க்கும்; கோவையில் வரவேற்பு
புதிய முதலீடுகளை ஈர்க்கும்; கோவையில் வரவேற்பு
புதிய முதலீடுகளை ஈர்க்கும்; கோவையில் வரவேற்பு

சுந்தரராமன், தலைவர், சைமா:
தமிழக ஜவுளித் துறை , கடந்த சில ஆண்டுகளாக சிரமத்தில் இருந்து வருகிறது. இச்சூழலில் ஜவுளித் துறையின் வேண்டுகோள்களை கருத்தில் கொண்டு பல்வேறு சிறப்பு அறிவிப்புகளை பட்ஜெட்டில் அறிவித்து, அதன் வாயிலாக தொழிலின் போட்டித் திறனையும் மதிப்புக் கூட்டுத் திறனையும் மேம்படுத்தியதற்கு மாநில அரசுக்கு நன்றி.
பசுமை பாதுகாப்பது அவசியம்
மணிகண்டன், அறங்காவலர், குளங்கள் பாதுகாப்பு அமைப்பு:
கடந்த பட்ஜெட்டில் ஆற்றின் கரைகளில் பசுமை பாதை அமைக்கப்படும் என, அறிவித்து இருந்தனர். அது இப்போது தான் அறிவிக்கப்பட்டுள்ளது. கரையில் ரோடு போட்டு வாகனங்கள் செல்ல வழி செய்வது இயற்கைக்கு எதிரான விஷயமாகும். ஆறு அதன் இயல்பு மாறாமல் இருக்க வேண்டும். கோவை நகரம் விரிவடைந்து வருகிறது. அதனால் மரங்கள் நட்டு வளர்த்து ஆற்றின் பசுமை மாறாமல் இயற்கையாக பராமரிப்பது அவசியம். ஆற்றை நம்பி பல உயிரினங்கள் வாழ்க்கின்றன. அதற்கு தொந்தரவு இல்லாமல் உகந்த சூழலை உருவாக்க வேண்டும்.
வரலாற்று ஆதாரம் கிடைக்கும்
சுதாகர், தலைவர், யாக்கை மரபு அறக்கட்டளை:
கோவை வெள்ளலுார் பகுதியில் தொல்லியல் ஆய்வுகள் நடத்த போவதாக இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை வெள்ளலுார் ஒரு முக்கியமான தொல்லியல் களம். ரோமானிய நாணயங்கள் இங்கு நிறைய கிடைத்துள்ளன, முதுமக்கள் தாழி உள்ளிட்ட பல வரலாற்று சின்னங்கள் இங்கு கிடைத்துள்ளன. மேலும் ஆய்வு செய்தால் கொங்கு மண்டலத்தில் வரலாற்று தொண்மையை அறிந்து கொள்வதற்கான ஆதாரங்கள் கிடைக்கும். அறிவிப்போடு இல்லாமல், விரைவாக பணியை துவக்க வேண்டும்.