
மும்பையில் கைது செய்யப்பட்ட மஞ்சு வாரியர் பட இயக்குனர் ஜாமினில் விடுதலை
தன் மீது வீணாக அவதூறு பரப்புகிறார் என அவர் மீது போலீசில் புகார் அளித்தார் மஞ்சு வாரியர். இதனை தொடர்ந்து அப்போது கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டார் சணல்குமார் சசிதரன். ஆனால் போலீசார் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும் என கூறிய நிலையில் அவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டார். இதனால் அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் கடந்த சில மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டிருந்தது. சமீபத்தில் அவர் அமெரிக்காவிலிருந்து கேரளா திரும்புவதற்காக மும்பை விமான நிலையம் வந்து இறங்கியபோது கேரளாவில் இருந்து அங்கே சென்ற போலீசார் அவரை கைது செய்து அழைத்து வந்தனர். அதன் பிறகு அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய நிலையில் தற்போது நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியுள்ளது..






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!