
கேரளாவில் காந்தாரா 2ம் பாகத்தை வெளியிடுவதில் புதிய சிக்கல்
இந்த நிலையில் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் லிஸ்டின் ஸ்டீபனுக்கும் படத்தின் முதல் இரண்டு வார கலெக்ஷனில் ஏற்பட்டுள்ள பங்கு பிரிக்கும் பிரச்னை காரணமாக இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது. வினியோகஸ்தர் லிஸ்டின் ஸ்டீபன் இரண்டு வாரங்களுக்கு வசூலில் 55 சதவீதம் பங்கு தர வேண்டும் என கேட்கிறார்.
ஆனால் திரையரங்கு உரிமையாளர்களோ முதல் வாரம் மட்டுமே 55 சதவீத பங்கு தர ஒப்புக் கொண்டுள்ளனர். லிஸ்டின் ஸ்டீபன் இந்த விஷயத்தில் இறங்கி வர பிடிவாதம் காட்டுவதால், இந்த படம் கேரளாவில் வெளியாவதில் புதிய சிக்கல் எழுந்துள்ளது இருந்தாலும் படம் வெளியாக இன்னும் மூன்று வாரங்கள் இருப்பதால் அதற்குள் இருதரப்பிலும் பேசி பிரச்னையை சரி செய்து விடுவார்கள் என சொல்லப்படுகிறது.























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!