
ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன சீனிவாசன்
செப் 19, 2022
Advertisement
மலையாள சினிமாவின் முக்கியமான ஆளுமை சீனிவாசன். இயக்குனர், எழுத்தாளர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர். 200க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியிருக்கிறார். 1998ம் ஆண்டு வெளியான "சிந்தாவிஷ்டாய ஸ்யாமலா" படத்திற்காக தேசிய விருது பெற்றார். இவரது மகன் வினித் சீனிவாசன் தற்போது தந்தையை போன்றே பல துறைகளில் ஜொலித்து வருகிறார்.
வயது மூப்பின் காரணமாக சீனிவாசனுக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், சீனிவாசனை நடிகை ஸ்மினு சிஜோ அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛சீனு சேட்டன் நலமுற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிறு சிறு உடல் உபாதைகள் தவிர, அவர் பூரண நலமுடன் இருக்கிறார்"" என்கிறார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் சீனிவாசன் ஆளே உருமாறி போயிருக்கிறார்.
வயது மூப்பின் காரணமாக சீனிவாசனுக்கு சமீபத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவர் படங்களில் நடிக்கவில்லை. இந்நிலையில், சீனிவாசனை நடிகை ஸ்மினு சிஜோ அவரது இல்லத்திற்கு சென்று நேரடியாக சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு தொடர்பாக அவர் கூறுகையில், ‛‛சீனு சேட்டன் நலமுற்று திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. சிறு சிறு உடல் உபாதைகள் தவிர, அவர் பூரண நலமுடன் இருக்கிறார்"" என்கிறார். அவருடன் எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அதில் சீனிவாசன் ஆளே உருமாறி போயிருக்கிறார்.
Tags
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!