
2 நிமிட விளம்பரத்திற்காக தவறான தகவலை பரப்புவதா : மெஹ்ரின் கோபம்
சில ஆண்டுகளுக்கு முன்பு ஹரியானா முன்னாள் முதல்வர் பஜன் லாலின் பேரன், பவ்யா பிஷ்னோயுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆனால் திருமணத்திற்கு முன்பே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இதனால் திருமணம் நடக்கவில்லை. இந்த நிலையில் அவர் ஒரு தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு அவருடன் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து மெஹ்ரின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது : கடந்த 2 ஆண்டுகளாக இது போன்ற வதந்திகள் என்னைப் பற்றி வந்து கொண்டிருக்கின்றன. இவ்வளவு நாள் மவுனமாக இருந்தேன். ஆனால் தொடர்ச்சியான தொல்லைகள் காரணமாக இப்பதிவை எழுதுகிறேன்.
யாரோ முகம் தெரியாத ஒருவரை நான் திருமணம் செய்து கொண்டதாகப் போலியான தகவல்கள் வெளியானது. அதன் மூலம் இரண்டு நிமிடப் புகழைத் தேடிக்கொள்ள முயன்ற மோசமான நபரின் வேலை அது.
எனக்கு யாருடனும் திருமணம் ஆகவில்லை. நான் திருமணம் செய்ய முடிவு செய்யும் போது, இந்த உலகம் அறியும் வகையில் நடக்கும் என்பதை உறுதியாகச் சொல்கிறேன். என் சமூக வலைத்தள பக்கத்தை யாரோ தொடர்பில்லாத நபர்கள் திருத்த அனுமதிப்பதை நிறுத்த வேண்டும். என் சொந்த வாழ்க்கையைப் பற்றிய தகவல்களுக்கு நானே ஆதாரம் என்று தெரிவித்துள்ளார்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!