
ரூ.550 கோடியை தாண்டியதா கூலி வசூல்
ஆயிரம் கோடி வசூல் என்று எதிர்பார்த்த படம், பாதியில் நிற்பதால் ஓரளவு ஏமாற்றம் என்றாலும், இது தோல்வி படம் அல்ல, அனைவருக்கும் லாபத்தை கொடுத்த படம்தான் என்கிறார்கள் கோலிவுட்டில். படம் குறித்து கடுமையான விமர்சனங்கள் வந்தபோது வெளிநாட்டில் இருந்தார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். அவர் ஓய்வு எடுத்து வருகிறார். தான் ஹீரோவாக நடிக்கும் படத்துக்காக தாய்லாந்தில் சண்டை பயிற்சி எடுத்து வருகிறார் என்று கூறப்பட்டது.
இப்போது லோகேசும் தமிழகம் திரும்பிவிட்டார். ஆனாலும், அடுத்த படம் குறித்து, ரஜினி, கமல் இணையும் படம் குறித்து இதுவரை வெளிப்படையாக பேசவில்லை. இதற்கிடையில் ரஜினி ரசிகர்கள் கூலி ஆயிரம் கோடியை எட்டவில்லை. ஆனால், அடுத்து ரஜினி நடிக்கும் ஜெயிலர் 2 படம், ஆயிரம் கோடியை தொட வாய்ப்பு. அதிலும் பாலகிருஷ்ணா, சிவராஜ் குமார், மோகன்லால் உள்ளிட்டவர்கள் இருக்கிறார்கள் என்று இப்போதே பேச தொடங்கிவிட்டார்கள்.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!