
சித்திக் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் மீது வழக்கு பதிவு : மேலும் பலர் சிக்குகிறார்கள்
இந்தநிலையில் மலையாள நடிகர் சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும், நடிகருமான சித்திக் மீது திருவனந்தபுரம் மியூசியம் போலீஸ் நிலையத்தில் இளம் நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார். மேலும் மின்னஞ்சல் மூலமாக, மாநில டி.ஜி.பி.க்கும் அவர் புகார் மனுவை அனுப்பி உள்ளார்.
அந்த மனுவில் “2016ம் ஆண்டு திருவனந்தபுரம் மங்கட் ஓட்டலில் வைத்து நடிகர் சித்திக் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், வெளியே சொன்னால் நடப்பதே வேறு என மிரட்டியதாகவும்” தெரிவித்திருந்தார். இந்த புகாரை தொடர்ந்து நடிகர் சித்திக் மீது மியூசியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
சித்திக் தவிர இயக்குனர் ரஞ்சித், நடிகர்கள் ஜெயசூர்யா, மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு, இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் உள்பட 19 பேர் மீது வழக்கு பதிவு செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில் மணியன் பிள்ளைராஜு, இடவேள பாபு ஆகியோர் மீது வழக்கு பதிவாகி உள்ளது.






















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!