
திருமணத்திற்காக மதம் மாறினேனா? - குஷ்பு பதிலடி
மே 08, 2023
Advertisement
சினிமா நடிகை குஷ்பு இயக்குநர் சுந்தர் சியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அவந்திகா, ஆனந்திகா என்ற இருமகள்கள் உள்ளனர். பிறப்பால் இஸ்லாமியரான குஷ்பு, தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலில் பயணம் செய்து வருகிறார். இதனையொட்டி சிலர், அவர் திருமணம் செய்து கொள்வதற்காக மதம் மாறிவிட்டதாக குற்றம் சுமத்தி வந்தனர். சமீபகாலங்களில் சோஷியல் மீடியாவிலும் குஷ்புவின் திருமணம் குறித்தும், மதம் மாற்றம் குறித்தும் விவாதங்கள் எழுந்த வண்ணம் உள்ளது.
இதனையடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் திருமணத்திற்காக மதம் மாறிவிட்டதாக கூறுபவர்கள் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் நிச்சயமாக கேள்வி பட்டிருக்கமாட்டார்கள். திருமணத்திற்காக நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை. மதம் மாற சொல்லி யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. என் 23 வருட திருமண வாழ்க்கை மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது" என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
இதனையடுத்து இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குஷ்பு பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "நான் திருமணத்திற்காக மதம் மாறிவிட்டதாக கூறுபவர்கள் கொஞ்சம் அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இருக்கும் சிறப்பு திருமணம் சட்டம் குறித்து அவர்கள் நிச்சயமாக கேள்வி பட்டிருக்கமாட்டார்கள். திருமணத்திற்காக நான் எந்த மதத்திற்கும் மாறவில்லை. மதம் மாற சொல்லி யாரும் என்னை வற்புறுத்தவும் இல்லை. என் 23 வருட திருமண வாழ்க்கை மரியாதை, நம்பிக்கை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் உருவானது" என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார்.
Advertisement


















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!