
ரூ.300 கோடி வசூலை கடந்த ‛பொன்னியின் செல்வன் 2
மே 08, 2023
Advertisement
கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலையை மையப்படுத்தி இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி நடிகைகள் ஜஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். முதல்பாகம் வெளியாகி ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்தது. இரண்டாம் பாகம் ஏப்., 28ல் வெளியானது. தொடர்ந்து படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. நான்கு நாளில் ரூ.200 கோடி வசூலை குவித்த இந்த படம் இப்போது 10 நாட்களில் ரூ. 300 கோடி உலகளவில் கடந்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Advertisement



















வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!