தனது தோல்வியை மறைக்கிறது உத்தரபிரதேச அரசு: அகிலேஷ் சாடல்
தனது தோல்வியை மறைக்கிறது உத்தரபிரதேச அரசு: அகிலேஷ் சாடல்
தனது தோல்வியை மறைக்கிறது உத்தரபிரதேச அரசு: அகிலேஷ் சாடல்
ADDED : ஜூலை 06, 2024 05:09 PM

லக்னோ: 'ஹத்ராஸ் சம்பவத்தில் தனது தோல்வியை மறைக்க, உ.பி அரசு நூற்றுக்கணக்கான மக்கள் மரணத்திற்கு பொறுப்பு ஏற்காமல் ஒரு சிலரை கைது செய்து தட்டிக்கழிக்க விரும்புகிறது' என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேசம் ஹத்ராஸ் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக மாநில அரசால் நியமிக்கப்பட்ட 3 நபர் கொண்ட நீதி விசாரணை குழு நேரில் ஆய்வு செய்தனர். ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹத்ராஸ் சம்பவத்தில் தனது தோல்வியை மறைக்க, உ.பி அரசு நூற்றுக்கணக்கான மக்கள் மரணத்திற்கு பொறுப்பு ஏற்காமல் ஒரு சிலரை கைது செய்து தட்டிக்கழிக்க விரும்புகிறது.
இது போன்ற ஒரு நிகழ்வு நடந்தும் யாரும் பாடம் கற்கவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் தொடரும். உத்தரபிரதேச பா.ஜ., அரசின் ஆட்டத்தை பொதுமக்கள் முன் கொண்டு வர வேண்டும். இது போன்ற நிகழ்வுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜ., அரசு கூறினால் ஆட்சியில் இருக்க உரிமை இல்லை.இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார்