Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

ADDED : ஜூன் 12, 2024 11:15 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து நரேந்திர மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை( பிப்.,09) 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து மறுநாள், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேசிய பிரதமர் மோடி, அவர்களிடம் வாழ்த்து பெற்றதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீலும், பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அதற்கு முன், காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா பிரதமராக பதவி வகித்தார். இவரது மகன் எச்டி குமாரசாமி, தற்போது மோடி அரசில் மத்திய அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us