தனது தவறை மறைக்க கடந்த காலத்தை பற்றி கூறுவதா?: மோடியைக் கேட்கிறார் கார்கே
தனது தவறை மறைக்க கடந்த காலத்தை பற்றி கூறுவதா?: மோடியைக் கேட்கிறார் கார்கே
தனது தவறை மறைக்க கடந்த காலத்தை பற்றி கூறுவதா?: மோடியைக் கேட்கிறார் கார்கே
ADDED : ஜூன் 25, 2024 12:37 PM

புதுடில்லி: தனது தவறுகளை மறைக்க பிரதமர் மோடி கடந்த காலத்தைப் பற்றி கூறுகிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் கார்கே கூறியிருப்பதாவது: நாடு எதிர்காலத்தை நோக்கி காத்திருக்கிறது. தனது தவறுகளை மறைக்க பிரதமர் மோடி கடந்த காலத்தைப் பற்றி கூறுகிறார். கடந்த ஆண்டு பா.ஜ., ஆட்சியில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சியால் 140 கோடி இந்தியர்கள் பெரிய பாதிப்பை சந்தித்தனர். ஜனநாயகத்திற்கும், அரசியலமைப்பு சட்டத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்தியது.
கட்சிகளை உடைப்பது, எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்ய அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ., போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தினர். இது அறிவிக்கப்படாத அவசரநிலை அல்லவா?. 146 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பார்லிமென்டில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
சத்ரபதி சிவாஜி, மகாத்மா காந்தி, அம்பேத்கர் போன்ற மாபெரும் ஆளுமைகளின் சிலைகளை எதிர்க்கட்சிகள் கேட்காமல் பார்லிமென்ட் வளாகத்தில் இருந்து அகற்றி ஒரு மூலைக்கு மாற்றியபோது, ஒருமித்த கருத்து என்ற சொல் எங்கே?
நமது 15 கோடி விவசாயக் குடும்பங்கள் மீது மூன்று கறுப்புச் சட்டங்கள் திணிக்கப்பட்டு, அவர்கள் சொந்த நாட்டில் மாதக்கணக்கில் தெருவில் உட்கார வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டபோது, அவர்கள் சித்திரவதை செய்யப்பட்டபோது, ஒருமித்த கருத்து என்ற வார்த்தை எங்கே? .காங்கிரஸ் எப்போதும் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டத்தை ஆதரித்து வருகிறது, நாங்கள் அதை தொடர்ந்து ஆதரிப்போம். இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.