கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு
கள்ளச்சாராய விவகாரத்தில் ஆளும்கட்சிக்கு தொடர்பு: இபிஎஸ் குற்றச்சாட்டு

![]() |
மோசம்
திமுக ஆட்சிக்கு வந்தபிறகு இது 2வது சம்பவம். ஏற்கனவே மரக்காணம், செங்கல்பட்டில் 23 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தனர். அப்போது இனி தமிழகத்தில் கள்ளச்சாராய உயிரிழப்பு இருக்காது எனக் கூறினர். ஆனால் கள்ளக்குறிச்சி மரணம் மோசமானது. கள்ளச்சாராயம் காய்ச்சிய பகுதிக்கும் அங்குள்ள போலீஸ் ஸ்டேஷனுக்கும் வெறும் 300 மீட்டர் தான் இடைவெளி. நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் என எல்லாம் அருகில் இருந்தும் கள்ளச்சாராய நிகழ்வு நடந்தேறியுள்ளது.
சந்தேகம்
இதற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும். உயிரிழப்புக்கு கள்ளச்சாராயம் காரணம் இல்லை என கலெக்டர் சொன்னதால், மீண்டும் பலர் குடித்தனர். இதனால் பாதிப்பு அதிகரித்தது. ஒரு நபர் கமிஷன் மூலம் நியாயம் கிடைப்பது சந்தேகம். ஏற்கனவே செங்கல்பட்டு, மரக்காணம் கள்ளச்சாராய விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை பலனளிக்கவில்லை. கள்ளச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்.