Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மாமியாரை கொன்ற மருமகன் கைது

மாமியாரை கொன்ற மருமகன் கைது

மாமியாரை கொன்ற மருமகன் கைது

மாமியாரை கொன்ற மருமகன் கைது

ADDED : பிப் 12, 2024 06:52 AM


Google News
துமகூரு: குடித்து விட்டு வந்து தகராறு செய்வதை தட்டிக்கேட்டதால், மாமியாரை கொன்ற மருமகன் கைது செய்யப்பட்டு உள்ளார்.

துமகூரு அருபே பெலகும்பா கிராமத்தில் வசித்தவர் அஸ்வித் உன்னிசா, 58. இவரது மகள் பாத்திமா. இவருக்கும், மதுகிரி கொடிகேனஹள்ளியின் சையது சுகைல், 33 என்பவருக்கும், கடந்த நான்கு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்நிலையில், குடிபோதைக்கு அடிமையான சையது சுகைல், தினமும் மது அருந்தி வீட்டிற்கு வந்து, மனைவியிடம் தகராறு செய்து உள்ளார்.

இதனால் மனம் உடைந்த பாத்திமா, தாய் அஸ்வித் உன்னிசாவிடம் கூறினார். நேற்று முன்தினம் மகள் வீட்டிற்கு தாய் சென்றிருந்தார். இரவில் குடிபோதையில் வந்த சையது சுகைல் வழக்கம்போல மனைவியிடம் தகராறு செய்தார்.

இதனால் அவரை, அஸ்வித் உன்னிசா தட்டிக்கேட்டார். கோபம் அடைந்த மருமகன், மரக்கட்டையை எடுத்து மாமியாரை தாக்கினார். தலையில் பலத்த காயம் அடைந்தவர் இறந்தார். சையது சுகைலை, மதுகிரி போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us