Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அர்ச்சகர்களுக்கு சம்பளம் பாக்கி: காங்., அரசு மீது பா.ஜ., பாய்ச்சல்

அர்ச்சகர்களுக்கு சம்பளம் பாக்கி: காங்., அரசு மீது பா.ஜ., பாய்ச்சல்

அர்ச்சகர்களுக்கு சம்பளம் பாக்கி: காங்., அரசு மீது பா.ஜ., பாய்ச்சல்

அர்ச்சகர்களுக்கு சம்பளம் பாக்கி: காங்., அரசு மீது பா.ஜ., பாய்ச்சல்

ADDED : ஜூன் 13, 2024 04:53 PM


Google News
சிக்கமகளூரு:சிக்கமகளூரு பாபாபுடன் கிரி மலையில் உள்ள தத்தாத்ரேயா கோவில் அர்ச்சகர்களுக்கு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக காங்கிரஸ் அரசு சம்பளம் வழங்கவில்லை. அரசை கண்டித்து போராட்டம் நடத்த, பா.ஜ.,வினர் தயாராகி வருகின்றனர்.

சிக்கமகளூரு முல்லையங்கிரியில் பிரசித்தி பெற்ற தத்தாத்ரேயா கோவில் உள்ளது. இங்கு, 'தத்தாவின் பாதம்' அமைந்துள்ளது. ஹிந்து, முஸ்லிம் பக்தர்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் இங்கு முஸ்லிம்கள் உரூஸ் பண்டிகையும், ஹிந்துக்கள் தத்தா மாலை நிகழ்ச்சியும் கொண்டாடுகின்றனர்.

முந்தைய பா.ஜ., ஆட்சியில் தத்தா கோவிலுக்கு, இரண்டு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு அறநிலையத்துறை சம்பளம் வழங்கி வந்தது. இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, இரண்டு அச்சகர்களுக்கும் சம்பளம் வழங்கப்படவில்லை.

இதுபற்றி பா.ஜ., - எம்.எல்.சி., ரவி கூறுகையில், ''தத்தா கோவிலுக்கு பா.ஜ., ஆட்சியில் அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டனர். இதை காங்கிரஸ் அரசால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு மதத்தினரை திருப்திப்படுத்த, அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்காமல் உள்ளனர்.

''உடனடியாக அர்ச்சகர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். இல்லா விட்டால் இந்த அரசிடம் சம்பளம் வழங்க, பணம் இல்லை என்று கூறி, வீடு வீடாக சென்று பணம் வசூலித்து, அர்ச்சகர்களுக்கு நாங்கள் கொடுப்போம். அரசை கண்டித்து போராட்டம் நடத்தவும் தயாராகி வருகிறோம்,'' என்றார்.

***





      Our Apps Available On




      Dinamalar

      Follow us