Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மார்பில் பந்து பட்டதில் மரணம்

கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மார்பில் பந்து பட்டதில் மரணம்

கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மார்பில் பந்து பட்டதில் மரணம்

கிரிக்கெட் விளையாடிய சிறுவன் மார்பில் பந்து பட்டதில் மரணம்

ADDED : ஜூன் 03, 2025 08:56 PM


Google News
பெரோசாபாத்:உத்தர பிரதேசத்தின் பெரோசாபாத் அருகே, கிரிக்கெட் விளையாட்டின் போது, மார்பில் பந்து பட்டதில், 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

உ.பி.,யின் காதி ராஞ்சோர் என்ற இடம், நர்கி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் அமைந்துள்ளது. இந்த பகுதியை சேர்ந்த, 12 வயது சிறுவன், அன்ஷ் என்பவர், அருகில் உள்ள, துண்ட்லா நகரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் விளையாட சென்றார்.

அவர் சார்ந்த அணிக்கும், இன்னொரு அணிக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியின் போது, எதிர்பாராத விதமாக, எதிரணியினர் வீசிய பந்து, அன்ஷ் மார்பில் பட்டது.

இதில், சம்பவ இடத்திலேயே மயங்கி சரிந்த அந்த சிறுவனை, உடன் இருந்தவர்கள், அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்.

இந்த தகவல் கேட்டு, உடன் விளையாடிய நபர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இறந்த அன்ஷின் பெற்றோர், யார் மீதும் போலீசில் புகார் அளிக்கவில்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us