Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையில் குண்டுவெடிப்பு: ஒடிசாவில் சி.ஆர்.பி.எப்., அதிகாரி பலி

UPDATED : ஜூன் 14, 2025 07:05 PMADDED : ஜூன் 14, 2025 03:56 PM


Google News
Latest Tamil News
புவனேஸ்வர்;ஒடிசா-ஜார்க்கண்ட் எல்லையில் இன்று காலை நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட குண்டுவெடிப்பில் சி.ஆர்.பி.எப்.,அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிசா மாநிலம் சுந்தர்கஹ் மாவட்டம், நக்சல் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதியாகும். இந்நிலையில் அங்கு நக்சல் ஒழிப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நடவடிக்கையில் போது சி.ஊ்.பி.எப்., அதிகாரி பலியாகி உள்ளார்.

அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த மே-27 ம் தேதி அன்று கல் குவாரியில் இருந்த வெடிபொருட்களை திருடிய நக்சல்களை, ஜார்க்கண்ட்-ஒடிசா எல்லையில் உள்ள சரண்டா வனப்பகுதியில் தேடுதல் பணிக்குழுவில் உ.பி.,யின் குஷிநகரைச் சேர்ந்த 134 வது சி.ஆர்.பி.எப்., பட்டாலியனை சேர்ந்த ஏ.எஸ்.ஐ., சத்யபன் குமார் சிங் 34, ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தில் உள்ள கே பாலாங் கிராமத்திற்கு அருகே, காலை 6 மணியளவில் ஐ.இ.டி., குண்டு வெடித்ததில் அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த அவர் தற்போது உயிரிழந்தார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us