Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

மினிமம் பேலன்ஸ் இல்லையென கூறி வங்கிகள் ரூ.8,500 கோடி கட்டாய வசூல்

ADDED : ஜூலை 31, 2024 04:38 AM


Google News
Latest Tamil News
புதுடில்லி: பொதுத்துறை வங்கிகள், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களிடமிருந்து, அபராதமாக கடந்த ஐந்து நிதியாண்டுகளில் மட்டும், கிட்டத்தட்ட 8,500 கோடி ரூபாய் வசூலித்துள்ளன.

நேற்று பார்லியில் இதுதொடர்பான கேள்வி ஒன்றுக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி இவ்வாறு தெரிவித்தார். வெவ்வேறு வங்கிகள் மற்றும் வெவ்வேறு விதமான கணக்குகளை பொறுத்து, இந்த அபராத தொகை மாறுபடுகின்றன.

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்.பி.ஐ., கடந்த 2020 - 21ம் நிதியாண்டு முதல், குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்காத வாடிக்கையாளர்களுக்கு அபராதம் விதிப்பதை நிறுத்திய நிலையில், அதன் பிறகும் இந்த தொகை அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Image 1301333
பல வங்கிகள் காலாண்டு சராசரி இருப்பு வைத்திருக்காவிடில் அபராதம் வசூலிக்கின்றன. சில வங்கிகள் சராசரி மாதாந்திர இருப்பு வைத்திருக்காமல் இருந்தால், அபராதம் வசூலிக்கின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us