ADDED : ஜூலை 13, 2024 10:36 PM
பஜன்புரா:சாலையோரம் தேங்கியிருந்த மழைநீரில் கால் வைத்த பெண், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
வடகிழக்கு டில்லி யமுனா விஹார் சி பிளாக்கில், மோரல் மருத்துவமனை அருகே சாலை ஓரத்தில் மழைநீர் தேங்கி இருந்தது. நேற்று காலை 7:40 மணிக்கு அந்த வழியாக,
பூனம்,34, என்ற பெண் அந்தச் சாலையில் நடந்து வந்தார். தேங்கியிருந்த மழை நீரில் கால் வைத்ததும் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அதே இடத்தில் உடல் கருகி உயிரிழந்தார். நேற்று பெய்த மழையில் அங்கு தேங்கிய மழைநீரில் மின்கம்பத்தில் இருந்து மின் கம்பி அறுந்து விழுந்துள்ளது. அதை யாரும் கவனிக்கவில்லை.
பூனத்தின் கணவர் அதே பகுதியில் ஒரு மளிகைக் கடை நடத்துகிறார். கணவரைப் பார்க்க சென்ற போது பூனம் உயிரிழந்து விட்டார்.