மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருள் முடக்கம்: உலகம் முழுவதும் தவிப்பு

விமான சேவைகள் பாதிப்பு
மைக்ரோசாப்ட் விண்டோஸ் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக டில்லி, மும்பை, சென்னை, உள்ளிட்ட விமான நிலையங்களில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ உள்ளிட்ட நிறுவன விமானங்கள் தாமதமாக கிளம்பும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இண்டிகோ நிறுவனத்தின் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
எஸ்பிஐ விளக்கம்
மைக்ரோசாப்ட் பிரச்னையால் எஸ்பிஐ வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த வங்கி விளக்கம் அளித்து உள்ளது.
விளக்கம்
இதனிடையே, மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட பிரச்னை விரைவில் சரி செய்யப்படும். மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இயல்பு நிலை படிப்படியாக திரும்பும் எனக்கூறியுள்ளது.
மத்திய அரசு ஆலோசனை
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 10 மென்பொருளில் ஏற்பட்ட கோளாறால் சேவை பாதிப்பு குறித்து மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். கோளாறுக்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர்கள், மத்திய அரசின் சேவைகள் பாதிக்கப்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
பங்கு வர்த்தகம் பாதிப்பு
மைக்ரோசாப்ட் கோளாரால் பங்கு வர்த்தகதமும் பாதிப்புக்கு உள்ளாகியது.
எலான் மஸ்க் கிண்டல்
![]() |