Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

குளத்தில் மூழ்கி வாலிபர் பரிதாப பலி

ADDED : ஜூன் 06, 2024 04:08 AM


Google News
Latest Tamil News
தங்கவயல் : குளத்தில் நீச்சல் பயிற்சிக்கு வாலிபர், நீரில் மூழ்கி பலியானார்.

மாரிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் நாகேந்திரா, 19. இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன், நாகமரத்து ஓடை என்ற இடத்தில் உள்ள குளத்திற்கு நீச்சல் அடிக்க சென்றுஉள்ளனர்.

நீச்சல் கற்றுக் கொள்ளகுளத்தில் நண்பர்களுடன் நாகேந்திரா குதித்துள்ளார். ஆனால், ஆழம் தெரியாமல் மூழ்கியுள்ளார்.உடன் சென்றவர்கள் மற்றவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு படையினர், நீச்சல் தெரிந்தவர்கள் குளத்தில் குதித்து நாகேந்திரா உடலை மீட்டனர்.

இயற்கைக்கு மாறான இறப்பு என்று போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனைக்கு பின்னர், உடலை குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். நேற்று மாலை மாரிகுப்பம் இடுகாட்டில், நாகேந்திரா உடல் அடக்கம் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us