Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் பயண நேரம், கட்டணம் அதிகம்

ADDED : ஜூன் 17, 2024 04:20 AM


Google News
Latest Tamil News
- நமது நிருபர் -

மதுரையில் இருந்து பெங்களூருக்கு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட உள்ளது. மதுரையில் அதிகாலை, 5:15 மணிக்கு புறப்படும் வந்தே பாரத் ரயில் திருச்சிக்கு காலை, 7:15க்கு செல்கிறது.

அங்கிருந்து, 7:20 மணிக்கு புறப்பட்டு காலை, 9:55 மணிக்கு சேலம் செல்கிறது. அங்கு, 10:00 மணிக்கு புறப்பட்டு மதியம், 1:15 மணிக்கு பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷன் சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் பெங்களூரு எஸ்.எம்.வி., ஸ்டேஷனில் மதியம், 1:45 மணிக்கு கிளம்பும் ரயில் இரவு, 10:25 மணிக்கு மதுரை வருகிறது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் இன்று அதிகாலை, 5:15 மணிக்கு நடக்கிறது.

இந்த வந்தே பாரத் ரயிலுக்கு திண்டுக்கல்லில் நிறுத்தம் இல்லை. மேலும், திருச்சியை சுற்றி செல்வதால் துாரம், 145 கி.மீ., அதிகரிக்கிறது. 2 மணி நேரம் பயணமும், கட்டணமும் அதிகம் உள்ளது. எனவே, திருச்சியில் இருந்து பெங்களூருக்கு தனியாக வந்தே பாரத் ரயிலை இயக்கலாம்.

மதுரை - பெங்களூரு ஆரஞ்ச் நிற வந்தே பாரத் ரயிலை திண்டுக்கல், கரூர் வழியாக இயக்க வேண்டும். இத்தடத்தில் உள்ள முக்கிய வர்த்தக நகரங்களான திண்டுக்கல், ஓசூரில் வந்தே பாரத் ரயில் நின்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வலியுறுத்தியுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us