பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!
பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!
பல்லாரிக்கும், அமைச்சர் பதவிக்கும் ராசியில்லையா? பதவி காலத்தை நிறைவு செய்யாத 5 அமைச்சர்கள்!

ஜனார்த்தன ரெட்டி
கடந்த 2008ல் கர்நாடகாவில் பா.ஜ., அரசு இருந்தது. இந்த அரசில் சட்டவிரோத சுரங்க தொழில், பெரும் சர்ச்சைக்கு காரணமானது. சட்டவிரோத சுரங்க தொழிலை கண்டித்து, அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா தலைமையில், பெங்களூரில் இருந்து பல்லாரி வரை, காங்கிரஸ் பாத யாத்திரை நடத்தியது.
ஸ்ரீராமுலு
சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பான அறிக்கையில், அன்று அமைச்சராக இருந்த இவரது பெயரும் இருந்ததால், ஸ்ரீராமுலுவும் பதவி இழக்க நேரிட்டது. இவரும் கூட தனி கட்சி துவங்கினார். அதன்பின் பா.ஜ.,வுக்கு திரும்பினார். 2023 சட்டசபை தேர்தலில் தோல்வி அடைந்த அவருக்கு, சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், பல்லாரி தொகுதியில் சீட் கிடைத்தது. இப்போதும் தோல்வி அடைந்துள்ளார். இவரது அரசியல் எதிர்காலம் என்னவாகும் என, ஆதரவாளர்கள் கவலையில் உள்ளனர்.
சந்தோஷ் லாட்
கடந்த 2013ல் காங்கிரஸ் அரசு அமைந்தது. சித்தராமையா முதல் முறையாக முதல்வரானார். இவரது அமைச்சரவையில் சந்தோஷ் லாட், செய்தி மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சராக பதவி வகித்தார். பல்லாரி மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருந்தார்.
பரமேஸ்வர் நாயக்
கடந்த 2013ல், காங்கிரஸ் அரசில் பரமேஸ்வர் நாயக்குக்கு, அமைச்சராகும் அதிர்ஷ்டம் தேடி வந்தது. ஆனால் இவர் மீதும், சட்டவிரோத மணல் கடத்தல், மதுபான விற்பனை குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து, பரமேஸ்வர் நாயக் மற்றும் கூட்லகியின் அன்றைய டெபுடி எஸ்.பி., அனுபமா ஷெனாய் இடையே, பெரும் விவாதம் ஏற்பட்டது.
நாகேந்திரா
இன்றைய காங்கிரஸ் அரசில், முதல்வர் சித்தராமையா அமைச்சரவையில், பழங்குடியினர் நலத்துறை அமைச்சராக இருந்தவர் நாகேந்திரா. இவரது துறையின் கட்டுப்பாட்டில், வால்மீகி மேம்பாட்டு ஆணையம் செயல்படுகிறது. இதில் பணியாற்றிய அதிகாரி சந்திரசேகர், சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார்.