அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு
அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு
அரசு பணியாளர் போட்டி தேர்வுகளை மராத்தியில் நடத்த மஹா., அரசு முடிவு
ADDED : மார் 14, 2025 03:09 AM

மும்பை :“மஹாராஷ்டிர அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியில் நடத்தப்படும்,” என, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ., சிவசேனா, தேசிய வாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இம்மாநில அரசு பணியாளர் தேர்வு ஆணைய தேர்வுகளில், வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்படுவது குறித்து, சிவசேனா உத்தவ் பிரிவு எம்.எல்.ஏ., மிலிந்த் நர்வேக்கர், சட்டசபையில் கேள்வி எழுப்பினார்.
இதற்கு, முதல்வர் பட்னவிஸ் அளித்த பதில்:
பொதுவாக மாநில அரசு பணிகளுக்கான தேர்வு, மராத்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுகின்றன. வேளாண் மற்றும் பொறியியல் துறை பணிகளுக்கான ஒருசில தேர்வுகளை மட்டும் ஆங்கிலத்தில் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
அந்த தேர்வுகளுக்கான பாடப் புத்தகம் மராத்தியில் இல்லாததே அதற்கு காரணம். அந்த பாடப் புத்தகங்களை மராத்தியில் தயார் செய்யும் பணியை மாநில அரசு துவக்கிஉள்ளது.
பொறியியல் படிப்புகளை மராத்தியில் நடத்த புதிய தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. எனவே, மாநில அரசு பணியாளர்கள் தேர்வு ஆணைய தேர்வுகள் அனைத்தும் மராத்தி மொழியிலேயே நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.