மழைக்காலத்தில் சொர்க்கமாக மாறும் மடிகேரி
மழைக்காலத்தில் சொர்க்கமாக மாறும் மடிகேரி
மழைக்காலத்தில் சொர்க்கமாக மாறும் மடிகேரி

பூலோக சொர்க்கம்
குறிப்பாக மடிகேரியை பூலோக சொர்க்கம் என்றால், அது மிகையே அல்ல. பொதுவாக மழைக்காலத்தில், மடிகேரிக்கு செல்வது கஷ்டம் என, பலரும் நினைக்கின்றனர். இது தவறான கருத்தாகும்.
பனிப்பொழிவு
ஜீவநதியான காவிரி ஆறு பிறப்பிடமான தலக்காவிரியின் மலைப் பகுதிகளில், பனிப்பொழிவு அதிகம் உள்ளது. எனவே சுற்றுலா பயணியர் குவிந்துள்ளனர். மழைக்கால ஆரம்ப நாட்களில், மலைகள் மீது ஏறுவது சிறிது கஷ்டம் என்றாலும், மலை மீது ஏறி சென்ற பின், தெரியும் காட்சிகள் அற்புதமாக இருக்கும்.
ஐந்து ஏரி
மலையில் பாண்டவர்கள் தங்கி இருந்த போது, குடிக்கவும், குளிக்கவும் தண்ணீர் தேவைப்பட்டது. எனவே மலை மீது அம்பு எய்து ஐந்து ஏரிகளை உருவாக்கினர். இப்போதும் ஏரிகளை காணலாம். கோடை காலத்திலும் இவற்றில் தண்ணீர் வற்றுவது இல்லை என்பது, குறிப்பிடத்தக்கது.
உயரமான மலை
கற்கள், முட்களை தாண்டி செல்ல வேண்டும். 9 கி.மீ., நடந்து செல்ல வேண்டும். 5,367 அடி உயரமான கோட்டை மலை, மைசூரு மாவட்டத்தின், மூன்றாவது மிக உயரமான மலையாகும்.