Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி பங்களா: ஆட்சி மாறியதும் வசமாக சிக்கியது!

UPDATED : ஜூன் 17, 2024 06:48 PMADDED : ஜூன் 17, 2024 06:26 PM


Google News
Latest Tamil News
அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி 500 கோடி ரூபாய் மதிப்பில் ஆடம்பர பங்களா கட்டி உள்ளார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எக்ஸ் சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளது. ஆட்சி மாறியதும் ஜெகன்மோகன் ரெட்டி வசமாக சிக்கி உள்ளார்.

சமீபத்தில் ஆந்திராவில் நடந்த சட்டசபை தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தோல்வி அடைந்தார். தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த சந்திரபாபு நாயுடு முதல்வரானார். ஆட்சி மாறியதும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பிரச்னைகளும் வந்த வண்ணம் இருக்கிறது. கடந்த ஜூன் 15ம் தேதி, தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜெகன் மோகன் ரெட்டி வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் புல்டோசர் மூலம் போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளில் ஒன்றான ரிஷிகொண்டா என்ற மலைப்பகுதியில் ஜெகன்மோகன் ரெட்டி ரூ. 500 கோடி மதிப்பில் ஒரு அரண்மனை போன்ற பங்களா கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பங்களாவை தெலுங்கு தேச கட்சி எம்.எல்.ஏ., காந்தா ஸ்ரீனிவாஸ் உள்ளூர் தலைவர்களுடன் பார்வையிட்டார். இந்த புகைப்படத்தை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என தெலுங்கு தேசம் கட்சி தெரிவித்துள்ளது.

பங்களாவில் இருக்கும் வசதிகள்!

கண்ணாடிகள், கிரானைட்கள் என மிக பிரம்மாண்டமாக பங்களா கட்டப்பட்டு உள்ளது. பாத்ரூம் தொட்டிக்கு மட்டும் 25 லட்சம் ரூபாய் செலவு செய்துள்ளனர். மொத்தம் ரூ.500 கோடி வரை செலவு செய்து ஜெகன்மோகன் ரெட்டி பங்களாவை கட்டி உள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us