பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்
பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்
பெங்களூரில் கொட்டி தீர்த்த கனமழையால் பரிதவிப்பு மெட்ரோ பாதையில் மரக்கிளை விழுந்ததால் ரயில் நிறுத்தம்

வீடுகளுக்குள் மழைநீர்
கனகநகரில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளுக்குள், மழைநீருடன் சேர்ந்து சாக்கடை கழிவுநீரும் கலந்தது. இதனால் அந்த வீடுகளில் வசித்த மக்கள், கடும் அவதி அடைந்தனர். இரவு முழுதும் துாங்காமல், வீட்டிற்குள் புகுந்த மழைநீரை, பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர். நேற்று காலை மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து போராட்டம் நடத்தினர். அங்கு சென்ற அதிகாரிகள், மக்களை சமாதானப்படுத்தினர்.
கனமழை
ரிச்மெண்ட் டவுன், சாந்திநகர், எலஹங்கா, ஹெப்பால், எலஹங்கா, இந்திராநகர், டிரினிட்டி, எம்.ஜி.ரோடு, ராஜாஜிநகர், விஜயநகர், பசவேஸ்வராநகர், மைசூரு ரோடு, ஜெயநகர், ராமகிருஷ்ண நகர், மல்லேஸ்வரம், கே.ஆர்.மார்க்கெட், டவுன்ஹால், மாநகராட்சி, சிவானந்தா சதுக்கம், சேஷாத்திரிபுரம், சிவாஜிநகர், கோரமங்களா, யஷ்வந்த்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.
சர்வீஸ் பாதிப்பு
செல்லகட்டா - ஒயிட்பீல்டு மெட்ரோ ரயில் பாதையில், எம்.ஜி.ரோடு - டிரினிட்டி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில், மரக்கிளை முறிந்து, மெட்ரோ ரயில் பாதை மீது விழுந்தது. இதனால் எம்.ஜி.ரோடு - டிரினிட்டி இடையில் மெட்ரோ ரயில் சேவை, அரை மணி நேரம் நிறுத்தப்பட்டது.
2,000 வாழை மரம்
மைசூரு ஹுன்சூர் தாலுகா நாகபுரா, ஹரலஹள்ளி கிராமங்களில் சூறைக்காற்றுடன் பெய்த மழைக்கு 2,000 வாழை மரங்கள் சாய்ந்தன.