Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

டில்லி பயிற்சி மைய சம்பவம் : விசாரணைக்கு உத்தரவு

ADDED : ஜூலை 29, 2024 09:15 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: டில்லியில் பயிற்சி மையத்தில் மழைநீர் தேங்கியதில் 3 மாணவர்கள் பலியான சம்பவம் குறித்து விசாரணை குழு அமைக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது

டில்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் டில்லி ராஜேந்திரா நகரில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் மழைநீர் புகுந்தது. . இதனால் கீழ் தளத்தில் தங்கியிருந்த மாணவர்கள் அதிர்ச்சியில் வெளியேறினர். சிலர் தப்பினர் 10க்கும் மேற்பட்டோர் வெளியே வர முடியாமல் தவித்தனர். மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பலியாகினர். 13 பேர் மீ்ட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக பயிற்சிமைய உரிமையாளர் உள்பட 5 பேரை கைது போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக உண்மை தன்மையை கண்டறிய விசாரணை குழு அமைத்து 30 நாட்களுக்கு அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us